தொற்று நோய்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்த அதிகாரிகள் இருவர் நியமனம்

தொற்று நோய்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்த அதிகாரிகள் இருவர் நியமனம்

டெங்கு மற்றும் தொற்று நோய்கள் தொடர்பான விடயங்களை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தவும், உத்தியோகபூர்வ அறிக்கைகளை வெளியிடவும் இரண்டு அதிகாரிகளை நியமிக்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் சார்பாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக நிபுணர் வைத்தியர் பிரசீலா சமரவீர மற்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் அதுல லியனபதிரன ஆகியோர் டெங்கு மற்றும் தொற்று நோய்கள் தொடர்பில் துல்லியமான மற்றும் உத்தியோகபூர்வ அறிக்கைகளை ஊடகங்களுக்கு வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு மற்றும் தொற்று நோய்கள் தொடர்பான தவறான தகவல்களைப் பரப்புவதால் சமூகத்தில் ஏற்படும் தேவையற்ற அச்சத்தை கட்டுப்படுத்தல் மற்றும் உத்தியோகப்பூர்வமற்ற அறிக்கைகள் காரணமாக ஊடகங்கள் மூலம் தவறான விளக்கங்களைத் தடுத்தல் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து மின்னணு மற்றும் அச்சு ஊடகவியலாளர்களும் பெயரிடப்பட்ட அதிகாரிகளிடமிருந்து மாத்திரமே தகவல்களைப் பெறுமாறு சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் பின்வருமாறு

வைத்தியர் பிரசீலா சமரவீர, சமூக நிபுணர், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு, 071 4938916 – [email protected]

வைத்தியர் அதுல லியனபதிரன, தொற்றுநோயியல் பிரிவு, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சகம், 071 5999757 – [email protected]

 

 

Share This