12 நாடுகளின் பயணிகளைத் தடை செய்யும் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 12 நாடுகளின் குடிமக்களுக்கு முழுமையான பயணத் தடையை விதித்துள்ளார்.
இதன்படி, ஆப்கானிஸ்தான், மியான்மர், ஈரான், லிபியா, ஏமன், ஹைட்டி, சோமாலியா, சூடான், எரித்திரியா, கினியா, கொங்கோ மற்றும் சாட் ஆகிய நாடுகளின் குடிமக்களுக்கு முழுமையான பயணத் தடையை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை ஜூன் ஒன்பதாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூபா உட்பட ஏழு நாடுகளின் குடிமக்களுக்கும் பகுதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கியூபாவைத் தவிர, புருண்டி, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு பகுதியளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையின் கீழ், அமெரிக்காவிற்கான பயணத்திற்கான நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்படும்.
விசா நடைமுறைகளை கடுமையாக்குவதன் ஒரு பகுதியாக இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடுகள் அடங்கும்.
ஆபத்தான வெளிநாடுகளிடமிருந்து அமெரிக்காவைப் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இந்த நடவடிக்கை அவசியம் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டில், டிரம்ப் நிர்வாகம் பல முஸ்லிம் நாடுகளின் குடிமக்கள் மீது தடையை விதித்திருந்தது. இந்தத் தடை பல முறை திருத்தப்பட்ட பின்னர் 2018 இல் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.
எனினும், 2021ஆம் ஆண்டு ஜோ பைடன் இந்த தடையை ரத்து செய்தார். அந்த நேரத்தில் இந்தத் தடைக்கு பதிலளித்த பைடன், இது அமெரிக்காவின் தேசிய மனசாட்சியின் மீதான கறை என்று கூறினார்.