பல மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை

பல மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் இன்று புதன்கிழமை ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக
இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு இலட்சத்து 73,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளன.
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதேவேளை, 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 73,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ள