மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு

பலான – கடுகண்ணாவ பகுதியின் இடையே உள்ள ரயில் பாதையில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டை -பதுளை ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இன்று (16) அதிகாலை 5.55 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு பயணித்த பொடி மெனிகே ரயில், பலான ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This