துஷார உபுல்தெனியவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்தமை தொடர்பான வழக்கில் அவர் இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது முறைப்பாடு தொடர்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் பிரதிவாதி சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்டு, பிணை மனுவை நிராகரித்து கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
மேலும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை துஷார உபுல்தெனியவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி சிறைக் கைதி ஒருவரை விடுதலை செய்தமை தொடர்பாக துஷார உபுல்தெனிய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்று முன்தினம் (09) கைது செய்யப்பட்டார்.