மூன்று கொலைகளுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி அனுராதபுரத்தில் கைது

தென் மாகாணத்தில் நடந்த மூன்று கொலைகளுக்குத் தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி உட்பட மூன்று சந்தேக நபர்கள், 2.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹெராயினுடன் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்டனர்.
அநுராதபுரம் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (27) மாலை அனுராதபுரத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைதானவர்களில் 44 வயதான இராணுவ சேவையில் இருந்து இடைவிலகிய ஒருவரும், 40 மற்றும் 30 வயதுடைய இரண்டு போதைப்பொருள் வர்த்தகர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று கொலைகளுக்குக் காரணமான துப்பாக்கிதாரி அனுராதபுரத்தில் உள்ள யாழ்ப்பாணச் சந்தியில் கைது செய்யப்பட்டார்.
மேலும் துபாயில் மறைந்திருக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் கீழ் செயல்படும் போதைப்பொருள் கடத்தல்காரராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்களிடம் இருந்து 88 கிராம் 490 மில்லிகிராம் ஹெராயினை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். சந்தேகநார்கள் இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
