
கொந்தெனிய பகுதியில் மூவர் படுகொலை!
மாவெனெல்ல – கொந்தெனிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பெண்களும், ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 52, 57 மற்றும் 66 வயதுடையவர்கள் எனவும் அவர் கொந்தெனிய பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் வெவ்வேறு வீடுகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 35 வயதான பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 33 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், முதற்கட்ட விசாரணையில் சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மாவனெல்ல பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
