மின் கட்டணத்தை 18 வீதத்தினால் உயர்த்த வேண்டிய அவசியமில்லை – ஹர்ஷ

மின்சார கட்டணத்தை 18 வீதத்தினால் உயர்த்த வேண்டிய அவசியமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார கட்டணத்தினை 09 சதவீதத்தில் பராமரிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
2009 ஆம் ஆண்டு இலங்கை மின்சார சட்டம் மற்றும் 1969 ஆம் ஆண்டு இலங்கை மின்சார சபை சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் ஒப்புக் கொள்ளப்பட்ட சூத்திரத்தை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.