ஒக்டோபர் மாதத்தின் முதல் 10 நாட்களில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000 ஐ கடந்தது

ஒக்டோபர் மாதத்தின் முதல் 10 நாட்களில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000 ஐ கடந்தது

இந்த மாதத்தின் முதல் 09 நாட்களில் 46,868 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இந்தியாவிலிருந்து 14,221 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இதே காலப்பகுதியில் சீனா, பிரித்தானியா, ஜேர்மன், பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்தும் அதிக
எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,772,362 என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )