வனப் பகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

இலங்கையின் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய தொலைபேசி இலக்கம் நாளை திங்கட்கிழமை(03) முதல் அமுலாகும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 1995 என்ற புதிய அவசரத் தொலைபேசி இலக்கம் ஊடாக வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க முடியும் என்று சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
