வவுணதீவில் வாள்வெட்டு – தாக்குதல் நடத்தியவரை கட்டி வைத்த பொது மக்கள்

வவுணதீவில் வாள்வெட்டு – தாக்குதல் நடத்தியவரை கட்டி வைத்த பொது மக்கள்

வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தில் மூன்று மோட்டார் சைக்கிளில் ஆறு பேர் கொண்ட கோபு வாள்வெட்டுக்குழுவினர் வீடு ஒன்றில் நுழைந்து தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

எவ்வாறாயினும், தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை மடக்கி பிடித்து கட்டி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாக்குதலை மேற்கொண்டவர்கள் மோட்டர் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி தெரியவருவதாவது,

மத்திய கிழக்கு நாடு ஒன்றில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வரும் ஒருவர் அந்த பணத்தை வைத்து வவுணதீவு பிரதேசத்தில் கோபு வாள்வெட்டு குழு ஒன்றை இயக்கிவருவதுடன் அந்த குழு பணத்தை பெற்று அவர்கள் சொல்லுபவர்களை தாக்குவது போன்ற அடியாட்கள் போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவதினமான செவ்வாய்க்கிழமை இரவு கொத்தியாவல பிரதேசத்திலுள்ள சது என்பவருடன் முன்விரோத காரணமாக அவர் மீது தாக்குதல் நடாத்த கோபு வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த ஆறு பேர் அவரின் வீடு தேடிச் சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் வீட்டுக்கு அருகிலுள்ள காணியில் மாடுகளை கட்டிக் கொண்டிருந்த போது அவர் மீது தாக்குதலை மேற்கொண்டதையடுத்து பாதிக்கப்பட்டவர் அங்கிருந்து தப்பிஓடி அருகிலுள்ள உறவினர் வீட்டில் தஞ்சடைந்துள்ளார்.

இந்த நிலையில் வாள்வெட்டு குழுவினர் அங்கு சென்று வீட்டினுள் புகுந்து பொருட்களை அடித்து சேதப்படுத்தி தாக்குதலை மேற்கொண்டதால் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

எவ்வாறாயினும், தாக்குதல் மேற்கொள் சென்ற சிறைச்சாலை உத்தியோகத்ரை மடக்கி பிடித்து கட்டிவைத்து பொலிஸாருக்கு அறிவித்தனர்.

இந்த நிலையில் வாள் வெட்டு குழுவினர் கட்டிவைத்த சிறைச்சாலை உத்தியோகத்தரை மீட்டு கொண்டு மோட்டார்சைக்கிளை அங்கு விட்டுவிட்டு தப்பி ஓடினர்.

அதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் மூன்று மோட்டார் சைக்கிள்களையும் மீட்டு கொண்டு சென்றதுடன் தாக்குதலில் காயமடைந்தவர்களை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This