இலங்கை மக்கள் தொகையில் சிறுவர் மட்ட எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி

இலங்கையில் சிறுவர் மட்டத்திலான எண்ணிக்கை விகிதத்தில் தொடர்ச்சியான மற்றும் கூர்மையான சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1946ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சிறுவர் மட்டத் தொகை 40 தொடக்கம் 42 வீதமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், 2024ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த தொகை 20 சத வீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறப்பு எண்ணிக்கையில் தொடர்ச்சியான சரிவு, திருமண தாமதம் மற்றும் உயர்கல்வியில் பங்கேற்பு அதிகரிப்பு ஆகியவை சிறுவர் மட்டத் தொகை குறைவதற்கு முக்கிய காரணங்களாகும்.
மேலும், சிறுவர் மட்டத் தொகையில் ஏற்படும் சரிவு எதிர்காலத்தில் தொழிலாளர் பற்றாக் குறைக்கு முக்கிய காரணமாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் விரிவாக்கம் குறைவாகவே இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
