நெறிமுறை ஆட்சேர்ப்புகளை பின்பற்ற வேண்டும் – ஜெனீவாவில் சுகாதார அமைச்சர் வலியுறுத்தல்

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற அரசாங்கத்தின் பரந்த கொள்கை தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, உள்ளூர் அதிகாரிகள் நாட்டின் ஆரம்ப சுகாதார அமைப்பை வலுப்படுத்த போராடி வருவதால், நாடுகள் அதிக பொறுப்பான மற்றும் நெறிமுறை ஆட்சேர்ப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.
ஜெனீவாவில் இடம்பெறும் உலக சுகாதார அமைப்பின் 78 ஆவது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
பொருளாதார உறுதியற்ற தன்மை, நோய் பரவல்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் இடபெயர்வு போன்ற அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் உலகளாவிய ஒத்துழைப்பு, நிலையான சுகாதார நிதி மற்றும் மீள்தன்மை கொண்ட அமைப்புகளின் முக்கியத்துவத்தை சுகாதார அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த அரை நூற்றாண்டில் நாங்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம், மேலும் அண்மைய பொருளாதார கொந்தளிப்பிலிருந்து பொதுமக்கள் மற்றும் உலகளாவிய நல்லெண்ணத்தின் பலத்தால் நாங்கள் மீண்டு வருகிறோம்
எங்கள் கொள்கை உலகளாவிய ஆரோக்கியத்திற்கான இலக்குகளுடன் ஒத்துப்போகின்றன. இலங்கையின் வெளிநோயாளர் பிரிவு வருகைகள் அதன் மக்கள்தொகையை விட மூன்று மடங்கு அதிகமாகும்
இது ஆரம்ப சுகாதார நிறுவனங்களைத் தவிர்ப்பதைத் தடுக்க வேண்டிய அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது நாட்டின் சுகாதார வழங்கலில் ஒரு முக்கிய பிரச்சினை.
சுகாதார நிபுணர்களின் பெருமளவிலான இடபெயர்வு முக்கிய பிரச்சினையாக உள்ளது. 2022 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கிடையில், இலங்கையின் 726 ஆலோசகர்கள், 1,116 வைத்திய அதிகாரிகள் மற்றும் சுமார் 2,800 செவிலியர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குச் சென்றுள்ளனர்”
இந்த நிபுணர்களுக்கு பயிற்சி அளிப்பதில் இலங்கை குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளைச் சந்தித்துள்ளது. இலக்கு நாடுகள் பொறுப்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்” என அமைச்சர் மேலும் கூறினார்.
மேலும் பொறுப்பான மற்றும் நெறிமுறை ஆட்சேர்ப்பு நடைமுறைகளையும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.