லண்டனுக்கான விமானங்கள் ரத்து – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

லண்டனுக்கான விமானங்கள் ரத்து – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

கொழும்பிலிருந்து லண்டனுக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL 503 விமானமும் இலண்டனிலிருந்து கொழும்பிற்கு வருகைத்தரவிருந்த UL 504 விமானமும் இன்று (21) இரவு 20:40 இற்கு புறப்படவிருந்த நிலையில், இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம் மின்சாரத் தடை மற்றும் தீ விபத்து காரணமாக நாள் முழுவதும் மூடப்பட்டுள்ளதால்
இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

பயணிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை கருத்திற்கொண்டு மாற்று ஏற்பாடுகள் குறித்து விரைவில் அறிவிக்கவுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது.

 

Share This