கொஸ்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு – சிறுமி உட்பட மூவர் படுகாயம்

கொஸ்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு – சிறுமி உட்பட மூவர் படுகாயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுமி ஒருவர் உள்ளிட்ட மூவர் இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாகவும், குறித்த மூவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பிஸ்டல் வகை துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 30 வயதான தாயும் அவரது 12 வயது மகளும், 44 வயதுடைய மற்றொரு ஆணும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் இதுவரை அறியப்படவில்லை.

இந்நிலையில், சந்தேக நபர்களைக் கைது செய்ய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share This