பல மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன் எழுவர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 18.6 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்திலிருந்து அவர்கள் வெளியேற முற்பட்ட போது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குவைத், துபாய் மற்றும் ஓமானில் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருகைத் தந்த இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானர்வகள் அனுராதபுரம், கெகிராவ, கஹவத்த மற்றும் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.