நீரில் மூழ்கி பலியான பாடசாலை மாணவன்

நீரில் மூழ்கி பலியான பாடசாலை மாணவன்

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுகவெல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ள நிலையில் மாணவர்களுடன்
நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

Share This