வரவு மற்றும் கடன் அட்டைகளை பயன்படுத்தி பஸ் கட்டணங்களை செலுத்துவதற்கான திட்டம் இந்த மாத இறுதியில் நடைமுறைக்கு

வங்கிகளின் வரவு மற்றும் கடன் அட்டைகளை பயன்படுத்தி பஸ் கட்டணங்களை செலுத்துவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடைமுறை எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
