சந்தையில் உப்புக்கு பற்றாக்குறை – அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக சந்தையில் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்த போதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார்.
இதனிடையே, சந்தையில் உப்பு விலையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும், 1 கிலோகிராம் உப்புப் பொதியை 450 முதல் 500 ரூபா வரையிலான விலையில் வர்த்தகர்கள் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
உப்பு விலை தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தேவையான சோதனை நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.