உக்ரைனின் எரிசக்தி நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல் –  பிரித்தானிய பிரதமர் கண்டனம்

உக்ரைனின் எரிசக்தி நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல் – பிரித்தானிய பிரதமர் கண்டனம்

ரஷ்யா உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் மேற்கொண்டதால் வெப்பநிலை -20°C (-4°F) ஆக குறைந்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல் மிக மோசமானது என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதால் நீண்ட மின்தடைகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா மற்றும் உக்ரைன் தலைவர்களுடன் போர் நிறுத்தம் குறித்து பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், போர் நிறுத்த அழைப்புகளை மறுத்துள்ளார்.

மேலும், உக்ரைனில் புதன்கிழமை அதிகாலை 100 க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பலர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )