அவசர புனரமைப்பு காரணமாக மூடப்படும் தெமட்டகொடை ரயில் கடவை

அவசர புனரமைப்பு காரணமாக மூடப்படும் தெமட்டகொடை ரயில் கடவை

அவசர புனரமைப்பு பணிகள் காரணமாக, தெமட்டகொடை ரயில் கடவை வீதி எதிர்வரும் 24 ஆம் திகதி முழுமையாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஒருகொடவத்தையில் இருந்து பொரளை வரை செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள தெமட்டகொடை ரயில் கடவையில் குறித்த தினத்தன்று அவசர புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன் காரணமாக, அன்று காலை 9:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை பிரதான வீதி வாகனப் போக்குவரத்து முழுமையாக மூடப்படும்.

இந்தக் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய வாகன நெரிசல் மற்றும் அசௌகரியங்களை குறைத்துக்கொள்ள, மாற்று வழிகளை பயன்படுத்துமாறு தம்மிக்க ஜயசுந்தர பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Share This