பல பகுதிகளில், வீதிகளை மேம்படுத்தும் செயற்றிட்டம் ஆரம்பம்

பல பகுதிகளில், வீதிகளை மேம்படுத்தும் செயற்றிட்டம் ஆரம்பம்

மறுமலர்ச்சிப் பாதையில் ஆயிரம் கிராமப்புற வீதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், மேலும் பல வீதிகளின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குண்டசாலை தேர்தல் மாவட்டத்தில் கண்டி மஹியங்கனை வீதியில் பல்லேகலையிலிருந்து தரிசனபுர வரையிலான வீதியின் 680 மீற்றர் பகுதியை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அதற்காக 1.83 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேனவின் தலைமையில் இந்த வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒரு மாதத்திற்குள் வீதிப் புதுப்பிப்பை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே, கண்டியில் உள்ள ஹரிஸ்பதுத்வ தேர்தல் தொகுதியில் யட்டியலகலவிலிருந்து மஹதென்ன வரையிலான ஒரு கிலோ மீற்றர் மற்றும் 650 மீற்றர் வீதியை புனரமைக்க 3.8 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுகிறது.

அந்த வீதியின் புனரமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரியாஸ் பாரூக்கின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

10 வருடங்களுக்கும் மேலாக மேம்பாடு தடைபட்டிருந்த ஹங்குரன்கெத்த தோட்ட வீதியின் புதுப்பித்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வீதி மிகவும் சேதமடைந்ததால், போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மறுமலர்ச்சிக்கான பாதை என்ற கருத்தின் கீழ், முதற்கட்டத்தில் இந்த வீதியின் இரண்டு கிலோமீற்றர் தூரத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக செலவிடப்பட்ட தொகை இருநூற்று இருபத்தேழு மில்லியன் ரூபாவாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் விஜேரத்னவின் தலைமையில் இந்த வீதி புதுப்பித்தல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

 

Share This