சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வர மீனவர்களுக்கு விளக்கமறியல்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 07 இராமேஸ்வர மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை(30) இரவு இவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் இன்று மாலை குறித்த மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த மீனவர்களை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.