யாழில் முறைப்பாடு செய்யச் சென்ற பெண்ணை வன்சொல்லால் திட்டிய பொலிஸார்

யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற பெண் ஒருவரை அங்கிருந்த அதிகாரிகள் வன்சொல்லால் திட்டியுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனது சகோதரனுக்கு ஆதரவாக பொலிஸ் நிலையத்திற்குச் சென்றை பெண்ணை அதிகாரிகள் இவ்வாறு திட்டியுள்ளனர்.
இது குறித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள குறித்த பெண், பொலிஸ் அதிகாரிகள் திட்டியதாக கூறப்படும் ஒலிப்பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த ஒலிப் பதிவில் பொலிஸ் அதிகாரிகள் மிகவும் ஆக்ரோசமாக பேசுவதை காணமுடிகின்றது. இவ்வாறு அதிகாரிகள் தரக்குறைவாக பேசுவது மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமக்கு ஏற்படும் பினக்குகள், முரண்பாடுகளை தீர்த்து கொள்வதற்காகவே பொலிஸ் நிலையத்திற்குச் செல்வதாகவும், எனினும், அங்குள்ள அதிகாரிகள் விடயங்களை பக்குவமாக கையாளாது ஆத்திரத்துடன் பேசுவதாக பாதிக்கப்பட்ட தரப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.