ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தத்தால் பயணிகள் அசௌகரியம்

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தத்தால் பயணிகள் அசௌகரியம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பயணிகள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

நீண்ட தூர ரயில் சேவைகள் இயக்கப்படாது எனவும் இன்று (17) காலை, காலி, நீர்க்கொழும்பு மற்றும் வெயாங்கொட போன்ற குறுந்தூர ரயில் பாதைகளில் மாத்திரமே ரயில்கள் இயக்கப்படும் எனவும் ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

மேலும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, நேற்று இரவு இயக்கப்படவிருந்த அனைத்து தபால் ரயில்களும் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

இந்த கோரிக்கைகளுக்கு அடுத்த வாரத்திற்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This