15ஆம் திகதிக்குள் சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் – பரீட்சைகள் திணைக்களம்

15ஆம் திகதிக்குள் சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் – பரீட்சைகள் திணைக்களம்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (GCE O/L) பரீட்சை முடிவுகள் ஜூலை 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்றும், விடைத்தாள் திருத்தும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்ட தராதர சாதாரண தர பரீட்சையை மொத்தம் 478,182 பேர் எழுதியதாகவும் அவர்களில், 398,182 பேர் பாடசாலை மாணவர்கள் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முடிவுகளை எவ்வாறு பார்ரவையிடுவது

முடிவுகள் வெளியிடப்பட்டதும், பரீட்சாத்திகள் தங்கள் முடிவுகளை பின்வரும் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் வழியாக ஒன்லைனில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.doenets.lk

http://www.results.exams.gov.lk

முடிவுகளை அணுக, பரீட்சாத்திகள் தங்கள் பரீட்சை குறியீட்டு இலக்கங்களை இரண்டு தளங்களிலும் உள்ளிட்டு முடிவுகளை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சாத்திகள் நிலையான இணைய இணைப்பைப் பயன்படுத்தவும் பொறுமையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏனெனில் குறித்த வலைத்தளங்கள் முடிவுகள் வெளியிடப்படும் போது அதிக நெரிசலை சந்திக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This