தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலம் விடுமாறு உத்தரவு

தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலம் விடுமாறு உத்தரவு

முன்னாள் அமைச்சர் தயா கமகேவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களை பகிரங்கமாக ஏலம் விடுவதற்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஜூலை மாதம் 02 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு இந்த நிறுவனங்கள் ஏலம் விடப்படும் என கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தின் பதிவாளரான பிரதி நிதி இதனைத் தெரிவித்துள்ளார்.

பீபிள்ஸ் லீசிங் & பைனான்ஸ் நிறுவனத்துக்கு செலுத்தப்பட வேண்டிய 104,229,342 ரூபாய் தொகையை வசூலிக்கும் நோக்கில் இந்த மூன்று நிறுவனங்களும் பகிரங்கமாக ஏலத்தில் விடப்படவுள்ளன.

பீபிள்ஸ் லீசிங் & பைனான்ஸ் நிறுவனத்துக்கு செலுத்தப்பட வேண்டிய 108,309,342 ரூபாவில், 4,080,000 ரூபா தொகை பிரதிவாதிகளால் செலுத்தப்பட்டுள்ளதால், மீதமுள்ள தொகையை வசூலிக்கும் நோக்கில் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் ஏலம் விடப்படுகின்றன.

தயா குழுமம் லிமிடெட், தயா அப்பரல் எக்ஸ்போர்ட்டர் (பிரைவேட்) லிமிடெட், ஒலிம்பஸ் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களே ஏலத்தில் விடப்படுகின்றன.

 

Share This