கிளிநொச்சியில் 03 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கிளிநொச்சியில் 03 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருத நகர்பகுதியில் அவர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்தப் பகுதியில் பாழடைந்த வீடொன்றில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதன்போது மூன்று பொதிகளில் இருந்த கஞ்சா தொகையை இராணுவத்தினர் கண்டெடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.