பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் முறைகேடுகள் இடம்பெற்றால் முறைப்பாடளிக்குமாறு அறிவிப்பு

சுற்றறிக்கைகளுக்கு மாறாக பாடசாலைகளில் குழந்தைகளைச் சேர்க்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் அரசியல் தலையீடு தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலும் , பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் சில இடங்களில் முறைகேடுகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முறைகேடுகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் கல்வி அமைச்சின் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடளிக்குமாறு பிரதி அமைச்சர் கேட்டுக்கொண்டார்.