கைதாகும் முதலமைச்சர்களை பதவி நீக்க புதிய சட்டம் – மக்களவையில் இன்று தாக்கல்

அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் உட்பட முக்கிய 03 சட்டமூலங்களை மத்திய அமைச்சர் அமித்ஷாமக்களவையில் இன்று அறிமுகம் செய்கிறார்.
ஒன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் , ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டமூலம் ஆகியவை இன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக கடுமையான மோசடி குற்றசாட்டுகளால் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய சட்டம் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டமூலத்தை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது.
இந்நிலையில் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.