நல்லை ஆதீன முதல்வர் இறையடி சேர்ந்தார்

நல்லை ஆதீன முதல்வர் இறையடி சேர்ந்தார்

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று 01.05.2025 இரவு 9 .40 மணியளவில் கொழும்பில் பூரணம் அடைந்தார் (இறையடி சேர்ந்தார்.)

இலங்கை தலைநகர்கொழும்பில் வைத்திய சிகிச்சைபெறவந்திருந்த அவர், கொழும்பு வெள்ளவத்தை கம்பன் கழகத்தில் தங்கி இருந்த நிலையில் சாயுச்சியம் பெற்றதாகத் தெரிய வருகிறது.

சுவாமிகளின் திருவுடல் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ஆதீனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, அன்று ( 02.05.2025) மாலை பூரணத்துவ சாந்தி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லை ஆதீனத்தைத் தோற்றுவித்த முதலாவது குருமுதல்வர், ஶ்ரீலஶ்ரீ சுவாமிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 11-04-1981இல் பூரணத்துவம் பெற்றதன் பின்னதாக, நல்லை ஆதீனத்தின் குருமுதல்வராக வீற்றிருந்து அறமாற்றிய சுவாமிகள், யுத்த காலத்திலும் தன்னாலான பணிகளைச் சிறப்பாக ஆற்றி வந்தவர்.

அத்துடன், சிறந்த மனிதநேயப் பண்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This