நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு

நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு

பொசன் போயா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் வரை தன்சல் பதிவுகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இடம்பெறும் என சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல் மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான தன்சல் நிகழ்வுகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது பரவி வரும் தொற்று நோய்களைக் கருத்திற் கொண்டு, தன்சல் ஏற்பாட்டாளர்களுக்கு தொடர் அறிவுறுத்தல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This