எசல பௌர்ணமியை முன்னிட்டு எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட தன்சல்கள்

எசல பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் 8,355 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அறிவுறுத்தல்களுக்கமைய சுகாதாரப் பாதுகாப்பான முறையில் தல்சல்களை வழங்குமாறு தொடர்புடைய அமைப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்தார்.
இதற்காக சுமார் 2,000 பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.