
மிலான் ஜயதிலக்க பிணையில் விடுவிப்பு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மிலான் ஜயதிலக்க,தொம்பே பிரதேச சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில் காணியொன்றின் வரைபடத்திற்கு அனுமதி வழங்கும்போது இடம்பெற்ற முறைகேடு காரணமாக அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டிருந்தார்.
CATEGORIES இலங்கை
