செக் குடியரசின் தூதுவர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு

இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவர் கலாநிதி எலிஸ்கா சிகோவா மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால நட்புறவை உருவாக்கி இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
செக் குடியரசின் தொடர்ச்சியான ஆதரவை இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரிய பாராட்டினார்.
இரு நாடுகளுக்கும் இடையே அறிவியல் மற்றும் கல்வி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடல் இடம்பெற்றது.
அத்துடன் கல்வி பரிமாற்ற திட்டங்கள், ஆராய்ச்சி ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் அறிவு பரிமாற்ற திட்டங்களை பற்றியும் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.