H1B விசாவுக்கான புதிய கட்டணத்தை ரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

H1B விசாவுக்கான கட்டணத்தை 01 லட்சம் டொலராக அதிகரிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுகாதார நிறுவனங்கள், மத நிறுவனங்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட கூட்டமைப்பு ஒன்று, ட்ரம்ப் அறிவித்துள்ள இந்த கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
H1B விசாவுக்கான புதிய விதிமுறைகளை ட்ரம்ப் கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி வெளியிட்டார்.
அதில், H1B விசாவுக்கான கட்டணத்தை 1 லட்சம் டொலராக அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக2,000 டொலரிலிருந்து 05 ஆயிரம் டொலராக கட்டணத்தை அதிகரித்த ட்ரம்ப், தற்போது
பன்மடங்கு உயர்த்தி இருப்பது திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியிருக்கும்
அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் தங்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளன.
H1B விசா திட்டம், வெளிநாட்டு சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கல்வியாளர்களை அமெரிக்காவில் பணியமர்த்துவதற்கான ஒரு முக்கிய திட்டம்.
இது அமெரிக்காவின் புதுமை மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. சிறப்புத் துறைகளில் பணியாளர்களை நிரப்ப அனுமதிக்கிறது.
அரசின் தற்போதைய முடிவால், வைத்தியசாலைகள் மற்றும் ஊழியர்களையும், தேவாலயங்கள், போதகர்களையும், வகுப்பறை ஆசிரியர்களையும், நாடு முழுவதும் உள்ள தொழில்கள் முக்கிய கண்டுபிடிப்பாளர்களையும் இழக்கும் அபாயம் உள்ளது.
எனவே, இந்த உத்தரவை தடுத்து, முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான முன் கணிப்புத் தன்மையை மீட்டெடுக்குமாறு கோருகிறோம்” என தெரிவித்துள்ளனர்.