கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்

ஊழல் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை சந்தேக நபராகப் பெயரிடவும் நீதிமன்றம் அனுமதித்தது.

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

CATEGORIES
TAGS
Share This