கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றரை மாத குழந்தை உயிரிழப்பு

கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட  ஒன்றரை மாத குழந்தை உயிரிழப்பு

காலி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை மாத குழந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் ரங்க சபாபதிகே தெரிவித்தார்.

மே 17 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு, நிமோனியா இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட குழந்தையின் மாதிரிகளில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.

Share This