இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குரோஷியா சென்றடைந்தார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கனேடிய பயணத்தை நிறைவு குரோஷியா சென்றடைந்தார்.
ஜாக்ரெப் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி அந்நாட்டு ஜனாதிபதி சோரன் மிலனொவ் மற்றும் பிரதமர் பிளென்கோவிக்கை சந்திக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு உத்தியோகப்பூர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
பயணத்தின் முதற்கட்டமாக அவர் கடந்த 15 ஆம் திகதி சைப்ரஸ் சென்றார். அங்கு அந்நாட்டு ஜனாதிபதி கிறிஸ்டோடவுலிட்சை பிரதமர் மோடி சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் நேற்று நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
இந்த மாநாட்டில் கனடா பிரதமர், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.