காங்கேசன்துறை துறைமுகத்தில் போதைப்பொருளுடன் இந்தியர் ஒருவர் கைது

காங்கேசன்துறை துறைமுகத்தில் குஷ் போதைப்பொருளுடன் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து கப்பல் மூலம் வருகைத்தந்தவர்களை துறைமுக வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவரது பயணப் பொதியில் 04 கிலோகிராம் 120 கிராம் குஷ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதான 32 வயதான சந்தேகநபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.