மஹிந்தவை சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர்
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
கொழும்பில் உள்ள விஜேராம இல்லத்தில் இன்று புதன்கிழமை காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மரியாதை நிமித்தம் சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் இதன்போது கலந்து கொண்டார்.