
இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இன்று 25 புரிந்துணர்வு உடன்படிகை
இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இன்று 25 புரிந்துணர்வு உடன்படிகைகள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரண்டு நாள் அரச பயணமாக புடின் இந்தியா வந்துள்ள நிலையில், இரு நாட்டு அரச தலைவர்களும் இன்று சந்தித்துப் பேசவுள்ளனர்.
டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. புடின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருவரும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது, பாதுகாப்பு, அணு சக்தி, தொழில்நுட்பம், வர்த்தகம், விண்வெளி உள்ளிட்ட துறைகள் தொடர்பாக இரு நாடுகள் இடையே 25 உடன்படிகைகள் கையெழுத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, ரஷ்யாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான சுகோய் எஸ்யு57 போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா, ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இந்திய, ரஷ்ய உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இரு நாடுகளின் தொழிலதிபர்கள் பங்கேற்கும் கூட்டம் டில்லி பாரத் மண்டபத்தில் இன்று பிற்பகலில் நடைபெறவுள்ளது.
இதில் பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.
இதில் இரு நாடுகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக நேற்று மாலை இந்தியாவுக்கு வந்த ஜனாதிபதி புடினை, பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றிருந்தார்.
மேலும், பிரதமர் மோடி சார்பில் புடினுக்கு சிறப்பு விருந்தும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
