ஒற்றைத் தலைவலி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அண்மை காலமாக ஒற்றைத் தலைவலி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவும் வெப்பமான வானிலை காரணமாக இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக நரம்பியல் நிபுணர் வைத்தியர் காமினி பதிரான தெரிவித்தார்.
ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.