அரசாங்கத்தின் சொகுசு வாகனங்கள் நாளை ஏலம்

ஜனாதிபதி செயலகத்திற்குரிய சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, சொகுசு மற்றும் சேவையிலிருந்து நீக்கப்பட்ட மாதிரிகள் உட்பட 26 வாகனங்கள் நாளை வியாழக்கிழமை ஏலம் விடப்பட உள்ளன.
இந்த வாகனங்களுக்கான ஏலங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது.
முன்னாள் ஜனாதிபதியின் பதவி காலத்தில் அரசியலமைப்பின் 41(1) பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் ஊழியர்களால் பயன்படுத்தப்பட்ட வாகனங்களே இவ்வாறு ஏலத்தில் விடப்பட்டுள்ளன.
ஏலம் விடப்படவுள்ள வாகனங்களில் ஒரு BMW கார், 02 போர்ட் எவரெஸ்ட் ஜீப் வண்டிகள், ஒரு ஹூண்டாய் டெரகன் ஜீப், இரு லேண்ட் ரோவர் ஜீப் வண்டிகள், 01 மிட்சுபிஷி மொன்டெரோ, 03 நிசான் பெற்றோல் வகை வண்டிகள், 02 நிசான் கார்கள், ஒரு போர்ஷே (Porsche) கெய்ன் கார், 05 சாங்யோங் ரெக்ஸ்டன் ஜீப் வண்டிகள், 01 லேண்ட் குரூசர் சஹரா ரக ஜீப், 06 வீ 8 ஜீப் மற்றும் 01 மிட்சுபிஷி ரோசா குளிரூட்டப்பட்ட பஸ் அடங்கும்.
முன்னதாக, முதற்கட்டத்தின் கீழ் 14 சொகுசு வாகனங்கள், ஆறு சேவையிலிருந்து நீக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் பல்வேறு உதிரி பாகங்கள் ஏலத்தில் விடப்பட்டன.
செலவினங்களைக் குறைத்தல் மற்றும் நிதிப் பொறுப்பை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.