
2026 இல் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளதாக பிரதமர் அறிவிப்பு
2026 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தில்னா சமரவீர எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றில் பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார்.
2025 ஆம் ஆண்டில் இலங்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 2,362,521 சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளதாக கூறிய பிரதமர்
இது 2018 ஆம் ஆண்டில் 2,333,796 என்ற சாதனையை முறியடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டில் சுற்றுலா மூலம் இலங்கை 3.2 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயைப் பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
