காத்தான்குடியில் தீப்பரவல் காரணமாக பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதம்

மட்டக்களப்பு, காத்தான்குடி நகரில் இன்று (31) நண்பகல் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் காத்தான்குடி நகரசபை தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
எனினும் வர்த்தக நிலையம் முற்றாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.