வெளிநாட்டில் வேலைவாய்ப்பு எனும் போர்வையில் பல கோடி ரூபா மோசடி

வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 150 பேரிடம் இருந்து 05 கோடி ரூபாவிற்கும் மேல் மோசடி செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருலப்பனை பகுதியில் நேற்று மாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.