கதிர்காமம் ஆடிவேல் விழாவிற்கு செல்லும் காட்டுப்பாதை திறக்கும் திகதி அறிவிப்பு

கதிர்காமம் ஆடிவேல் விழாவிற்கு செல்லும் காட்டுப்பாதை திறக்கும் திகதி அறிவிப்பு

கதிர்காமம் ஆடிவேல் விழாவிற்கு செல்லும் காட்டுப்பாதையை எதிர்வரும் 20 ஆம் திகதி திறக்கவுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஜூலை 4 ஆம் திகதி வரை பாதையை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம் மற்றும் உகந்தலை முருகன் ஆலயங்களின் வருடாந்த ஆடிவேல் விழா 26 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 11 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

20 ஆம் திகதி காலை உகந்தலை முருகன் ஆலயத்தில் நடைபெறவிருக்கும் ஆரம்ப வைபவத்தையடுத்து காட்டுப்பாதை காலை 06 மணி முதல் பிற்பகல் 03 மணி வரை திறக்கப்பட்டிருக்குமெனவும் குறித்த காலப்பகுதியில் மாத்திரம் பாதையை பயன்படுத்த முடியுமெனவும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

 

Share This