
மேர்வின் சில்வா உள்ளிட்ட ஐவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 05 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜூன் 9 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மஹர நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கிரிபத்கொடை பகுதியில் அரச காணியை போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
CATEGORIES இலங்கை
