உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து ஒரு பிள்ளையின் தந்தை மரணம்!!

உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து ஒரு பிள்ளையின் தந்தை மரணம்!!

திருகோணமலை, கோமரங்கடவல-புலிக்கண்டி குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதி ஒரு பிள்ளையின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு (09) இடம்பெற்றுள்ளது. புலிக்கண்டிகுளம் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாகவும் தெரிய வருகின்றது.

இவ்விபத்தில் கோமரங்கடவல- பக்மீகம பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )